புதன், 29 மே, 2013

ச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி

ச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி

- பால. கௌதமன் - 

சர்ச்சுக்கு ஆள் பிடிக்கிற வேலையை சரியா செய்யுறேனா? தனிநாடுன்னு அடுத்து கோசம் போட்டு கிறிஸ்துவ நாடா மாத்துறதுக்கு சரியா பேரம் பேசுறேனா..? உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்ம பயவுள்ளைங்கள தீக்குளிக்க வெச்சி பரலோகத்துக்கு பார்சல் செய்யிறேனா...? எல்லாம் கவனிச்சிக்குங்க மக்களே!...... அதான் ச்சீமான்

கடலூரில் 18.5.2013 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு, தனி நாடு போராட்டம் வெற்றி பெரும். நீங்கள் தனித்து விடப்பட்டதாக எண்ண வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன். நான் சிறு வயதிலேயே ஆயுதம் ஏந்தி போராடினேன் என்று வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகப் பேசினார். இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் தேசியச் சிந்தனையுள்ள அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஒரு வழக்கும் கடலூரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் தேசத்துக்கு எதிராக போர் தொடுப்பது போன்ற பிரிவுகள் இடம் பெறவில்லை. ஒரு கண் துடைப்பு வழக்காகவே அது தெரிகிறது.

இந்நிலையில், யாசின் மாலிக்கிற்கும், சீமானிற்கும் எதிராக எழுந்த கண்டனத்திற்கு, செபஸ்டியன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  யாசின் மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது. காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா?  யாசின் மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன? மத்திய அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தானே? என்று திரைப்படத்தில் விவேக் சூடான தோசைக்கல்லில் ”சீட்’டை வைத்து துள்ளியது போல் பின்னால் பிடித்துக் கொண்டு பொங்கி கதறுகிறார். இதை பரிமேலழகர் விளக்கம் போல பிரசுரிக்க சில பத்திரிகைகள்!

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்ட இயக்கமல்ல, ஆனால் எல்.டி.டி.ஈ (LTTE) தடை செய்யப்பட்ட இயக்கமாச்சே? அப்படியென்றால், பிரபாகரன் படத்தை போட்டு பிரச்சாரம் செய்த சீமானை என்ன செய்ய வேண்டும்? அந்த  எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்வது குற்றம் என்று சிலரை கைது செய்தால் சீமான் அதை ஏற்றுக் கொள்வாரா? சட்டத்தின்படி அரசு நடக்கிறது என்று சர்டிபிகேட் கொடுப்பாரா? சட்டத்தை எரிப்பேன், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை என்றெல்லாம் சொல்லி அறிக்கை அரசியலும், விசாரணை கமிஷனும் அமைத்து, பத்திரிகை பக்கங்களை நிறைத்திருப்பார்களே! ஜே.கே.எல்.எப்(JKLF) அமைப்புக்காக தடை செய்யப்பட்ட இயக்கப் பட்டியலை வாசிக்கும் செபஸ்டியன் சீமானின் கண்ணில்  எல்.டி.டி.ஈ (LTTE) பெயர் படவில்லையா?

// இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு (யாசின் மாலிக்) இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது.//

எங்கு வேண்டுமானாலும் சென்று பேசலாம்..... இதை சீமான் ஒத்துக்கொள்வாரா? இந்த நியாயத்தை, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் நாள், நடிகர் ஜெயராமின் வீட்டைத் தாக்கும் போது யோசித்திருக்கலாமே. பாவம் அப்பாவி இளைஞர்கள் சிலர் வழக்குகளிலிருந்து தப்பியிருப்பார்கள்!

ஆனால் என்ன பேசக்கூடாது என்று சட்டம் சொல்கிறதே! அதுவும் சீமானுக்கு தெரியுமே!  நடிகை விஜயலட்சுமியின் மீது ஜூன் 2011ல் பேசக்கூடாததை பேசுகிறார் என்று 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் போது, இடம், பொருள், ஏவல் என்ற நயங்கள், சட்டம் எல்லாம் நியாபகத்திற்கு வரும். மாலிக் என்றால் பேச்சுச் சுதந்திரம்! விஜயலட்சுமி என்றால்....?

// காஷ்மீர் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக போராடி வருபவர் காஷ்மீர் பயங்கரவாதியா? //

நியாயமான  வாதம்! யார் அந்த காஷ்மீர் மக்கள்?

காஷ்மீர்  பள்ளத்தாக்கிலிருந்து இதே  யாசின் மாலிக் கூட்டத்தினரால் விரட்டப்பட்ட இந்துக்கள் காஷ்மீரிகள் இல்லையா? இவர்கள் பள்ளத்தாக்கின் ஜனத்தொகையில் 15 % ஆச்சே!  இப்படி பல நூற்றாண்டுகளாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வந்தவர்களை விரட்டிவிட்டது தான் மக்கள் போராட்டமா? உரிமைப் போராட்டமா? பின் யாருக்காக இந்தப் போராட்டம்? தாருல் இஸ்லாம் என்ற பெயரில் உலகம் முழுவதையும் இஸ்லாமிய மயமாக்கும் அன்னிய, குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவுப் போராட்டம் தானே இது?

இலங்கையிலும்  கூட, இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டது போல் எத்தனைத் தமிழர்கள் எல்.டி.டி.ஈ யினரால் (LTTE)  சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர்? இலங்கைத் தமிழருக்கான போராட்டம் என்றால், ஏன் தமிழர்களை எல்.டி.டி.ஈ (LTTE) கொல்ல வேண்டும்? இனத்தின் பெயரில் நடக்கும் அராஜகங்களின் சங்கமம் தானே இந்த யாஸின் மாலிக்கின் கடலூர் கூட்டம்!

// யாசின் மாலிக் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி என்றால், அவருடன் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், இன்றுள்ள மன்மோகன் சிங் அரசும் எதற்காக பேசுகின்றன?//

ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள தலைவர்கள்  செய்யும் வேலை இது. ஆனால் ஜனநாயக வாதிகளிடம் தான் இதை செய்ய வேண்டும். அடிப்படை இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி, உலகாதய இஸ்லாமிய அடையாள ( pan-islamic identity) கொள்கையாகக் கொண்டுள்ள தேசத்துரோகிகளுடன் பேச்சு நடத்துவது அர்த்தமில்லாத காரியம் என்பதை விரைவில் இத் தலைவர்கள் புரிந்து கொள்வர்.

// மத்திய அரசுகள் யாசின் மாலிக் போன்றவர்களுடன் பேசுகின்றனர் என்றால் அவர்கள் காஷ்மீர் மக்களின் உண்மையான தலைவர்கள் என்கிற காரணத்தினால்தானா?//

இந்தக்  கேள்வியை காஷ்மீர் இந்துக்களிடமும், இலங்கையிலுள்ள எல்.டி.டி.ஈ (LTTE) அல்லாத தமிழ் அமைப்புகளிடமும் கேட்கலாமா?

எல்.டி.டி.ஈ (LTTE) யை ஆதரிக்காதவன் தமிழனா?

இலங்கை  போரின் போதும், அதற்குப் பின்னரும் பிரபாகரனையும், எல்.டி.டி.ஈ (LTTE) கொள்கைகளையும் விமர்சித்தால் அவன் தமிழினத் துரோகி. இந்த அடிப்படையில் யாசின் மாலிக் யார்? துரோகியில்லையா? இந்த இஸ்லாமியக் கூட்டங்கள் தானே, இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கு எதிராக சதிகள் பல செய்தது! இலங்கை போரிலே, ராஜபக்ஸெ அரசுக்கு ஆயுதம் வழங்கிய பாகிஸ்தானின் உற்ற நண்பன் யாஸின் மாலிக் எப்படி இலங்கை தமிழர்களின் நண்பனானார்? இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ஐ.நாவின் மனித உரிமை மீரல்கள் தீர்மானத்தை எதிர்த்த பாகிஸ்தானை யாசின் மாலிக் கண்டித்தாரா? அந்தத் தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவை மனித உரிமை பாதுகாவலன் என்று அழைத்தாரா? எப்படி இந்தத் தமிழ் துரோகி பூனைக்கு நண்பனாகவும் பாலுக்கு காவலாளியுமாக மாறினார்?

ஒருபுறம்  தமிழன் யார் என்றால் பிரபாகரனை  ஆதரிப்பவன் என்று விளக்கம் சொல்லிவிட்டு, தமிழினத் துரோகிகள் என்று பிரபாகரனால் அடையாளம் காட்டப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகளான மனித நேய மக்கள் கட்சிக் கூட்டத்தில் சென்று விடுதலைப் புலிகள் சார்பாக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்கிறார் செபஸ்டியன் சீமான். விடுதலைப் புலிகள் அமைப்பு என்றாவது வன்முறைக்கு மன்னிப்பு கேட்டதுண்டா? அப்படியே கேட்டிருந்தாலும் சீமானை என்றாவது பிரதிநிதியாக அறிவித்து மன்னிப்பு கேட்கச் சொன்னதா? அப்படி அறிவித்திருந்தால் சீமான் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், கைது செய்யலாமா? யாசின் மாலிக்கை கடலூருக்கு அழைத்ததை நியாயப் படுத்த இந்த நியாயத்தைத்தானே சீமான் முன்வைத்தார்?

இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பவரெல்லாம் தமிழினக்காவலர் - இது தானே சீமானின் தமிழருக்கான வரையறை?

இடையிடையே ஒரு இந்து டச்(Touch) வேறு....

// இலங்கைத் தமிழர்கள் வழிபட்டுவந்த இரண்டாயிரம் கோயில்கள் இடித்துத்தள்ளப்பட்டதே //

காஷ்மீரில்  யாசின் மாலிக் கூட்டத்தினரால் பல்லாயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதே! அப்போது ஏன் இந்தப் புலி் பாயவில்லை ? சரி, காஷ்மிர் இந்துக்கள் தமிழர்களில்லை, முஸ்லீம்கள் மட்டும் தமிழர்கள் என்று வைத்துக் கொள்வோம்! மலேசியாவில் சம உரிமை கோரி போராட்டம் நடத்தும் தமிழர்கள் மலாய் அல்லது மெண்டிரின் மொழிகளா பேசுகிறார்கள்? இவர்களுக்காக சீமப்புலி ஏன் சீறவில்லை? பல்லில் முஸ்லீம் சீழ் கோர்த்துக் கொண்டுவிட்டதோ!

போராட்டங்களின்  அயோக்கியத்தனம்

திருப்பதி கோயிலுக்கு ராஜபக்ஸெ வருகிறார்  என்றவுடன் திருப்பதியில் போராட்டம் நடத்த கிளம்புகிறார்! சென்னையிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன் ஆர்ப்பாட்டம்! எதிர்த்து அறிக்கை விடாதவர்கள் தமிழின துரோகிகள்! ஒத்துக் கொள்கிறேன்....சொன்னவர் மட்டும்தானே செந்தமிழன்.....நாமெல்லாம் கருந்தமிழன்....சிகப்பின் மோகம் புரிகிறதா? விஜய லட்சுமியும் சிகப்பு தானே? அதனால் தான் சிகப்புப் போப்பை ராஜபக்ஸெ சந்தித்த போது கத்தோலிக்க சர்ச்சுகள், போப்பின் அதிகாரப்பூர்வ ஏஜண்ட்டுகளான பிஷப்புகளின் மாளிகைகள் போன்றவற்றை செபஸ்டியன் சீமா(சைம)ன் ஏன் முற்றுகையிடவில்லை! இலங்கைத் தீர்மானத்தில் ராஜபக்ஸெ அரசுக்கு எதிராக வாக்களித்த மத்திய அரசின் அலுவலகங்களுக்கு பூட்டுப் போட கிளம்பிய இந்த புற்றுப் பாம்புகளுக்கு, ராஜபக்ஸெவுக்கு ஆசி வழங்கிய போப்பின் சர்சுகளை தமிழ் நாட்டில் பூட்ட, திண்டுக்கலில் பூட்டு செய்யப்படவில்லையா? அல்லது சர்ச்சுகளுக்கு கதவில்லையா? கதவில்லாத சர்ச்சில் போதகர்கள் ஜான் ஜோசப்பும், வின்சன்ட் செல்வகுமாரும், குஜாலாக இருந்திருக்க முடியுமா?

2012 ஆகஸ்ட் மாதம் இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம் தமிழகத்தில் தலையெடுத்துள்ளது என்று சிங்களக் கத்தோலிக்க பத்திரிகை சீமான் கூட்டத்தினருக்கு சர்டிபிகேட் கொடுத்தனர். அதே கத்தோலிக்க அமைப்பின் யாழ் பேராயர் தாமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் உங்கள் அமைப்பினரை வன்மையாகக் கண்டித்து, வேளாங்கன்னிக்கு வரும் யாத்திரிகர்களை தடுக்கக் கூடாது என்று உத்திரவிட்டவுடன் போராட்டம் மாயமானது ஏன்? சிங்களர் வேளாங்கன்னிக்கு வந்தால் சர்சுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை அறிவித்திருக்கலாமே? சென்னை ரயில் நிலையத்திலும் தஞ்சையிலும் விரட்டி விரட்டி அடித்த சிங்களர்களைப் போல, வேளாங்கன்னிக்கு வந்த கிறிஸ்தவர்களையும் அடித்திருக்கலாமே? ஆண்டுதோறும் ஹரிஜன சகோதரர்களை அன்பு பௌத்ததிற்கு மதமாற்றும் ஆருயிர் நண்பர், சிறுத்தைப்புலி திருமாவளவனிடம், வரிப்புலி சீமான் பௌத்த எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டலாமே?

இலங்கையில்  நடந்த போர் குற்றங்களை 2009 ல் சேனல் - 4 வெளியிட்டது. அப்போதே குழந்தையை கொன்ற படமும் வெளியிடப்பட்டது. பின் 2012ல் மீண்டும் இந்த குழிப்பிள்ளைக்கு எழவு எடுக்கப்பட்டது. எங்கு இது தொடங்கியது? லயோலா கல்லூரி வளாகத்தில்! ஆரம்பத்தில் இதற்கு ஆதரவு இல்லை. மாநிலம் முழுவதும் கலகத்தை ஏற்படுத்த, கிறிஸ்தவ நிறுவனங்களான பாளையங்கோட்டை சேவியர்ஸ், வேலூர் வோர்ஸ் மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரிகளில் உண்ணாவிரதங்கள் தொடங்கப்பட்டன. உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மாணவர்கள் மற்றும் பலதரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் பொது எதிரியாக இலங்கை அரசும், இந்திய அரசும் அடையாளம் காட்டப்பட்டன. உண்ணாவிரதமிருந்த கிறிஸ்தவ மாணவன் பிரிட்டோ ஹீரோவாக்கப்பட்டான். இலங்கை அரசு போர் குற்றம் செய்தது, அதற்காக இந்திய அரசின் நிறுவனங்களையும், இந்திய அரசையும் ஏன் தாக்க வேண்டும்? இந்திய ராணுவ வாகனத்தை ஏன் தாக்க வேண்டும்? இந்தப் புலிக்கூட்டத்தின் கழுதைப்புலி உதயகுமார், இந்தப் பிரச்சினைக்கு தனி ஈழத்துடன் தனித்தமிழ்நாடே தீர்வு என்று முக நூலில் எழுதினார். இப்படி கிறிஸ்தவ நிறுவனங்கள், இன்னும் சொல்லப்போனால் கத்தோலிக்க நிறுவனங்களின் தயவில் போராடுபவர்கள், ராஜபக்ஸெவுக்கு ஆசி வழங்கிய போப்பின் படத்தை அந்த நிறுவனங்களிலிருந்து அகற்றினார்களா? அல்லது போப்பின் கொடும்பாவியை கொளுத்தினார்களா? அல்லது இவர்களுக்கே உரித்தான வழியில் படத்தின் மீது கல்லெரிந்தார்களா?

முல்லைப்  பெரியாருக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஐயப்ப பக்தர்களை தடுத்த சீமான், அப்பாவி மீனவர்களை கொல்லும் இலங்கைக்கு எதிராக கச்சத்தீவு அந்தோணியார் விழாவுக்கு செல்லும் கிறிஸ்தவர்களை ஏன் தடுக்கவில்லை?

திருவள்ளுவர்  தாமஸுடன் ஏற்பட்ட தொடர்பினால்  திருக்குறள் எழுதினார்  என்று வள்ளுவரையும், தமிழையும் கொச்சைப்படுத்தியவர் தெய்வநாயகம். அவருடன் இணைந்து  போராட்டம் நடத்துகிறார் நம் ’செந்’ தமிழர் . தெய்வத்தமிழ் தேவாரம் அருளிய ஞானசம்பந்தப் பெருமானை கொச்சைப்படுத்தியும், தமிழ் வேதம் அருளிய ஆண்டாளை வேசியாக வரித்து கதை எழுதுபவரையும், கம்பனையும், கண்ணகியையும் நாராசமாக வசைபாடுபவரையும் என்றாவது செபஸ்டியன் சீமா(சைம)ன் கண்டித்ததுண்டா?

’எங்களுக்கும் சிங்களர்களுக்கும் உள்ள உள்நாட்டுப் பிரச்சினை’ என்று 80 களில் பிரேமதாஸாவுடன் கூட்டுச் சேர்ந்து, அப்பாவித் தமிழர்களை கொல்லும் போது பிரபாகரனை சிங்களருடன் தொப்புள் கொடி இணைத்தது. அதே சிங்களனிடம் அடிவாங்கும் போது தொப்புள் கொடி வங்கக்கடலை கடந்து தமிழகத்தை நோக்கி நீள்கிறது.

 மொழியை  வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி பிரிவினைவாதத்தை தூண்டும் சீமான், மதத்தை வைத்து பிரிவினைவாதத்தைத் தூண்டும் சர்ச், மற்றும் யாசின் மாலிக்குடன் ’கை’ கோர்ப்பது ஆச்சரியமில்லை. இது ஆபத்து! தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் இது பேராபத்து!

சைமனுக்கு சங்கூதாவிட்டால் தமிழுக்கு சங்கு ஊதிவிடுவார்கள் துரோகிகள்!

தமிழர்களே உஷார் !

வெள்ளி, 24 மே, 2013

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

- பால. கௌதமன் - 

யார்  போற்றப்பட வேண்டும்?
யாருக்கு  மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?
தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!
பெருமையும்  உரனும் ஆடூஉ மேன
அச்சமும்  மடனும் நாணும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப
(தொல்காப்பியம்)
ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.
அப்படிப்  புகழப்பட வேண்டிய ஆடவர் யார்? 
மனித  நேய மக்கள் கட்சி உறுப்பினர் திரு அஸ்லாம் பாஷா கோரிக்கையை ஏற்று ஹைதர் அலிக்கும், கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் திரு. அ.சவுந்தரராசன் மற்றும் செல்வி.பால.பாரதியின் கோரிக்கையை ஏற்று திப்புசுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மே மாதம் 15 ஆம் நாள், தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிவித்தார்.
எதற்காக இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது?
முதல்வர்  சொல்கிறார்!
ஆங்கிலேய  ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்த்தெழுந்து, தன்னுயிரையும் துச்சமென மதித்துப் போராடிய …....
இதில் கவனிக்கப் படவேண்டியது  ”ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிரான போராட்டம்”
அந்த  போராட்டம் என்ன? அடிமைத்தனம் என்ன?
வரலாறு  என்ன சொல்கிறது? முதலில் கிறிஸ்தவப் பாதிரியாரின் குறிப்பிலிருந்து தொடங்குவோம். கிறிஸ்தவ, முஸ்லீம்கள் சொன்னால் நமக்கு அது வேத வாக்கு ஆயிற்றே! அதுவும் வெள்ளைக்கார பாதிரியென்றால் கேட்கவே வேண்டம்! சூரியன் மேற்கே உதிக்கிறது என்றாலும் அது சரியே!. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அக்மார்க் வெள்ளைக்கார ஐரோப்பிய பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்?
முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்.
(K.P. Padmanabha menonனின் cochin history பக்கம் 573)
பாதிரி  பார்தலோமாகொ (Fra Bartolomaco) பயணக் குறிப்பு எழுதுபவர். அவர் அங்கி மாட்டினாரா?, பாவ மன்னிப்பு கொடுத்தாரா என்றெல்லாம் நம் பாவிகள் கேட்கக் கூடும். அதனால் மேலும் இரண்டு பாதிரிகளின் குறிப்பை பார்ப்போம். அப்படியாவது இந்தப் பாவிகள் நம்புவார்களா? அல்லது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்பதால் பாதிரிகளை திட்டுவார்களா? பாதிரிகளை திட்டினால் ரோமானிய கடாட்சம் கிடைக்காது என்று அஞ்சுவார்களா? அங்கியுடன் மதமாற்றம் செய்ய வந்த ஜெர்மென் மிஷனரி கண்டெஸ்ட் (Guntest) என்ன சொல்கிறார்:
60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து  அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது"
இதையே மற்றொரு கிறிஸ்தவரான பார்க்ஹர்ஸ்ட் (CA Parkhurst ) உறுதி செய்கிறார்.
கிட்டத்தட்ட மொத்த கோழிக்கோடும் தரை மட்டமாக்கப்பட்டது”
ஆமேன் சொன்ன பின் அப்பீல் உண்டா? கிறிஸ்தவர்களே சொல்லிவிட்டார்கள்! இன்னுமா சந்தேகம்? இருப்பினும் மதச்சார்பற்ற வரலாற்றாளர்களின் கருத்தையும் கொஞ்சம் படித்துப் பார்ப்போமே!
Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!
ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.

இங்கிலீஷ்காரன் வரலாறும், கால்டுவெல்லும், மெக்காலேயையும் குரு முதல்வராகக் கொண்டு, இந்திய சிந்தனைகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் புறம் தள்ளும் சிந்தனைச் சிற்பிகளுக்கு,  மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:
ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது”.

சொன்னால் நம்பமாட்டோம். ஆவணம் இருக்கிறதா என்று ஆணவமாகக் கேட்பார்கள் நம் உண்மை விரும்பி தோழர்களும், பகுத்தறிவுப் பெட்டகங்களும். பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.
திப்புவுக்கு மணிமண்டபம் வைக்க ஒரு தகுதி உள்ளது என்று நம் திப்புவின் பிரஜைகள் வாதிட ஒரு காரணம் இருக்கிறது. பார்ப்பானை கொன்றான் ! தீபாவளியை ஒழித்தான்! சமஸ்கிருத கல்விச் சாலையை அழித்தான்! இதைவிட வேறு என்ன வேண்டும் ? இத்தகவலை எனது நண்பரும், மூத்த ஆராய்ச்சியாளருமான திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை  இந்த இணைப்பில் காணலாம் (http://groups.yahoo.com/group/ramanuja/message/4857).
"அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை  ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் - கல்யாணிகள் - அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”
அப்பாடா! இதற்காகவாவது மணிமண்டபம் கட்ட வேண்டாமா? வீரமணி மண்டபத்தில் விருந்து வைப்பார்! கவலை வேண்டாம்!
மயக்கமற்ற நிலையில் ஒரு மனிதனாகப்  பார்த்தால், இப்படி, ஆண், பெண், பச்சிளங்குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்து, சொத்துக்களை சூறையாடி, வாள் முனையில் லட்சக்கணக்கானோரை மதமாற்றிய  திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளை ஏகாதிபத்திய அடிமைத்தள எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்ல முடியுமா? 
வரலாறு  என்பது, ஆதிக்க வர்க்கம் அவர்களுக்கு சாதகமாக எழுதுவது என்று பாடம் சொல்லும் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையில் உதித்த மணிமண்டபமாயிற்றே? அதனால் இதை பூஷ்வாக்களின் ஒப்பாரி என்று கூடச்சொல்வார்கள். அப்படியென்றால் முஸ்லீம்களின் வரலாற்றுக் குறிப்பு ஏதேனும் உள்ளதா? முஸ்லீம்கள் சொன்னால் இந்த நாட்டில் எதை வேண்டுமென்றாலும் நம்பலாமே! அவுரங்கசீபின் கொடுமைகளை சித்தரிக்கும் கண்காட்சி, முஸ்லீம்கள் அவுரங்கசீப் ’நல்லவன்’ - னு சொன்னதால் தானே மார்ச்சு 6, 2008 அன்று சென்னையில் நிறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்லீம்களின் குறிப்பை இந்த அறிவை தின்று உயிர் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
மைசூர்  ராணுவத்தின் ஒரு இஸ்லாமிய அதிகாரி  இஸ்லாமிய கொடுமைகளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார், அதனை திப்புவின் 11வது மகனும் உயிர் தப்பிய ஒரே வாரிசுமான குலாம் முகம்மது சுருக்கமாக எழுதியுள்ளார். (இந்த இளவரசர் குலாம் முகம்மது, திப்பு சுல்தான் 1799ல் இறந்த  பின்னர் ப்ரிட்டிஷாரால் கொல்கொத்தாவுக்கு நாடுகடத்தப்பட்டார்) இதோ அந்தப் பொன் எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு...
4 காத தொலைவு வரை தெருக்களில் எதையும் காணவில்லை, ஹிந்துக்களின் சிதறிய உறுப்புகளையும், சிதைவடைந்த உடல்களையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. நாயர்களின் (ஹிந்துக்கள்) நாடு, பொதுவான கிலியால் பீடிக்கப்பட்டிருந்தது, அதனை ஹைதர் அலிகானின் படையெடுக்கும் குதிரைப்படையின் பின்னே வந்த மாப்பிள்ளைகளின் கொடூரம் மிகவும் அதிகப்படுத்தியது; அவர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரையும் படுகொலை செய்தனர்; கொந்தளித்து வரும் இந்த மாப்பிள்ளைகளின் பெரும்படையின் நடத்தை காரணமாக எந்த எதிர்ப்பும் இல்லாதது மட்டுமல்லாமல், கிராமங்கள், கோட்டைகள், கோவில்கள், மக்களின் அனைத்து வசிப்பிடங்கள் என எல்லாமே ஆளரவமற்று இருந்தன. (பக்கம் 461)
திரும்பிய பக்கமெல்லாம் ஹைதர்  அலி கானுக்கு எதிர்ப்பே  காணப்படவில்லை; ஒவ்வொரு வசிப்பிடமும் கைவிடப்பட்டு, அதில் வசித்து வந்த பொது மக்கள் பாவம், காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பிச் சென்றனர்; அங்கும் அவர்களின் துரதிர்ஷ்டம் துரத்தி வந்தது. பிராமண தூதுவர்களை ஹைதர் அலி கான் காடுகளுக்கு அனுப்பி வைத்து, தான் ஓடிப் போன ஹிந்துக்களை மன்னிப்பதாக வாக்களித்தான். ஆனால் கருணை, மன்னிப்பு என்ற வாக்குக்கு செவி சாய்த்து திரும்பி வந்த அந்த அபலைகளை, வட இந்தியாவின் இஸ்லாமிய கொடுங்கோலனைப் போலவே தூக்கிலிட்டான், அவர்களின் பெண்டிரும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர் (ப.468)
கேரளத்தை விட்டு அகலும் முன்பாக ஹைதர் அலி கான், நாயர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சமுதாய, அரசியல் உரிமைகளைப் பறிப்பதாக பிரகடனப்படுத்தினான், அவர்கள் ஆயுதங்களை தாங்க முடியாது. இந்த பிரகடனத்தினால், தன்மானம் உள்ள நாயர்களை தலை வணங்கச் செய்ய முடியவில்லை, ஏனென்றால், இத்தகைய அவமானங்களையும், சீர்கேட்டையும் விட மரணமே மேல் என்று நினைத்திருக்கலாம். அதனால் ஹைதர் அலி கான் வேறு ஒரு பிரகடனத்தை பிறப்பித்தான், அதன்படி, எந்த நாயர்கள் இஸ்லாத்தை தழுவ முன் வருகிறார்களோ, அவர்களுக்கு சமுதாய, அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதோடு, அவர்கள் ஆயுதங்களும் தாங்கலாம் என்று அறிவித்தான். பல பிரபுக்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டி இருந்தது; ஆனால் கணிசமான பெரும்பகுதியினர் (நாயர்கள், பிரபுக்கள், பிராம்மணர்கள்) இந்த கடைசி பிரகடனத்திற்கு தலைவணங்குவதைக் காட்டிலும், தெற்குப் பகுதியில் இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுவதையே மேல் என்று கருதினார்கள்”. (பக்கம் 469)
1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).
இப்படி  எழுதிய திப்புவின் மகன், ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டவன். ஆங்கிலேயர்கள் அவனை இப்படி எழுதச் சொல்லியிருப்பார்கள். எழுதிய பேனாவின் மை தொழிலாளர்களின் இரத்தத்தால் உருவானது அதை மார்க்ஸ்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று கூட ஒரு வாதத்தை இந்த சுல்தான்களின் அடிவருடிகள் முன்வைக்கலாம். அதிர்ஷ்டவசமாக திப்புவின் திருக்கரங்களால் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்துள்ளன. மலையாள பஞ்சாங்கப்படி சிங்கம் 1099ம் ஆண்டு, அதாவது ஆகஸ்ட் மாதம் 1923ம் ஆண்டு பாஷா போஷினி பத்திரிக்கையில் சர்தார் கே.எம்.பணிக்கர் (Sardar K.M Panicker) வெளியிட்ட சில ஆய்வுக் கட்டுரைகள் திப்புவை தோலுரித்துக் காட்டுகிறது. கேரள வரலாறு பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுக்காக அவர் அவற்றை லண்டனில் இருக்கும் The India Office Libraryயிலிருந்து கொணர்ந்தார் என்பதும் மேற்கோளில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை சுல்தான் - உத் - தவரிக் (Sultan-ut Tawarikh) மற்றும் தரிக் - இ – குடடாடி ( Tarikh-i-Khudadadi) என்ற இந்த காட்டுமிராண்டிகளின் சுய சரிதத்திலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.
நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”
1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:
12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”

1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:
நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.
1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai)  எழுதிய கடிதம்:
நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.
இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில்  பொறிக்கப்பட்டுள்ளது.
"நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”
ஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு  இரக்கமில்லாத கொடுமைக்காரன்  எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.
ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”
இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில  தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான் ஆனால் மைனாரிட்டிகளுக்கு ஷாம்பூ போடும் இடதுசாரிகள், இத்தாலி சாரிகள், கழகக் கண்மணிகள், மற்றும் அறிவைமட்டுமே தின்று உயிர் வாழும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்வார்களா?
இப்படி வெறியாட்டம் ஆடிய ரத்தக்காட்டேரிகள் ஆலயங்களை விட்டு வைத்திருப்பார்களா என்ன? ஆவணங்கள் என்ன சொல்கின்றன?
Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.
திரு கே.பி.பத்மநாப மேனோன் (K.P. Padmanabha memon) அவர்கள் எழுதிய History of Cochin, திரு ஏ.ஸ்ரீதர மேனோன் (A Sreedhara Menon) எழுதிய History of Keralaஆகிய நூல்கள், திப்புவால் தரைமட்டமாக்கப்பட்ட கோயில்களை பட்டியலிடுகின்றன.
மலையாள  ஆண்டு, சிங்கம் 952, அதாவது ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.”
அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில்,  ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.
கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான  Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.
திப்பு  சுல்தானின் சில தனிப்பட்ட  நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.
இப்படிப்பட்ட  வன்கொடுமையாளனை மத நல்லிணக்கவாதியாக சித்தரித்து திப்புவின் வாள் (sword of Tippu Sulthan)  என்ற தொலைக்காட்சித் தொடர் நம் நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, திப்பு எப்படி அனைத்து மதத்தவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தினான் என்று சில அறிவு ஜீவிகள் கட்டுரைகளும், தொலைக்காட்சிப் பெட்டியில் பேட்டிகளும் கொடுத்து முஸ்லீம்கள் அருள் வேண்டி மண்டியிட்டனர். உண்மையிலேயே இந்துக்கள் மீது திப்பு மதிப்பு வைத்திருந்தானா? இதோ முனைவர். எம். கங்காதரன் மாத்ருபூமி வார இதழில் ஜனவரி 14-20, 1990ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
திப்புவின் காலத்தில் மைசூரில் நிலவிய சமுதாய, சமய, அரசியல் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, இது போன்றவற்றை தவிர்க்க முடியாது. ச்ருங்கேரி மடத்துக்கு கெட்ட ஆவிகளை விரட்ட நிதி உதவி கொடுக்கப்படுவது பற்றிய தகவலும், திப்பு சுல்தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவே ஹிந்து சமயத்தை திப்பு மதித்தான் என்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது.”

மேலும் திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice)
ஸ்ரீரங்கப்பட்டினக்  கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.

இந்த  திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளும், கோர தாண்டவங்களும் இன்றளவும் கூட கேரள மக்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்களின் காலத்திலும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, மதமாறிய முஸ்லீம்கள், எல்லைதாண்டிய இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற செய்தியை நாடறிந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. கே.மாதவன் நாயர் எப்படி பதிவு செய்கிறார்? இதோ அந்தப் பதிவு...

கொடூரமான மாப்பிள்ளை லஹலா (1921ல் மலபாரில் நடந்த கிலாஃபத் கலவரத்தின்) தோற்றுவாயை, திப்பு சுல்தான் நிகழ்த்திய படயோட்டக்கலத்தின் பரவலான, கட்டாயமான மதமாற்றம் மற்றும் கொடுமைகளின் பின் விளைவுகளில் காண முடியும்.”
இந்திய  வரலாறு! ஏன், உலக வரலாற்றிலேயே நாகரீகமான எந்த சமுதாயமும் வெட்கித் தலை குனியும் அளவுக்கு அரங்கேறிய மாப்பிளா கலகத்தின் தோற்றுவாய் என்று சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்ட கொடுமை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த கொலைகார, கொள்ளைக்கார, காட்டுமிராண்டிகளுக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் மண்ணிலும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் மண்ணிலும்.அறம் வளர்த்த ஒளவையும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபமா?
சங்க  இலக்கியமான புறநானூறு பெருங்குற்றங்களாக  எவைகளை சுட்டிக் காட்டுகிறது?
ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை  மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்பார்த்  தப்பிய கொடுமை யோர்க்கும்
வடுவாய் முழுங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ கொடுமை யோர்க்கும்
செய்தி  கொன்றோர்க்குய்தி யில்லென
புறநானூறு (34 : 1-6)
நன்றி மறப்பது தான் பெரிய குற்றம்  என்பதை சொல்ல, மகா பாதகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.  காறாம் பசுவின் மடுவை அறுத்தல், வேத அந்தணரை கொலை செய்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கருவைச் சிதைத்தல் சங்கத் தமிழர்களால் மகா பாதகங்களாக கருதப்பட்டுள்ளது. இந்தப் பெரும் குற்றங்கள் அனைத்தையும் செய்த ஈனப் பிறவிகளுக்கு, தமிழ்தாய் சிலையும், வள்ளுவர் சிலையும் வைத்து, நான் தான் 'ஒரிஜினல்' தமிழன் என்று மார்தட்டும் தமிழர்கள் மணிமண்டபம் எழுப்பப் போகிறார்களாம்! முஸ்லீம் ஓட்டுக்காக இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவைதானா? தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப சகோதர பாசம்


பால.கௌதமன்
----------------------

ஜன.30 (30.01.2013) காலை 11.30 மணியளவில் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் நான் கருத்துச் சுதந்திரம் உள்ள மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ போய் விடுவேன் என்ற பரபரப்பு மிரட்டல் விடுத்தார் நடிகர் கமல் ஹாசன். உலக வரைபடத்தை உடனே எடுத்துப் பார்த்தேன். அப்படி எதாவது நாடு இருக்கிறதா என்று!
மார்ஸ் ரோவர்  விண்கலம் நினைவுக்கு வந்தது!
கமல் ஹாசனுக்காக அமேரிக்கா சிறப்பு ராக்கெட் விடும் என்று நம்பியிருந்தேன்!
தமிழர் ஒருவர் முதலில் செவ்வாய் மண்டலத்தில் குடியேறப் போகிறார் என்பது நமக்கும் பெருமை தானே? இவருடன் யார் யாரெல்லாம் செல்லப் போகிறார்கள் என்றும் யோசித்தேன்!
மறுபுறம் மதச்சார்பின்மை என்றால் என்ன? என்பது கூடத் தெரியாமல் நாம் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் என்னை வாட்டியது!
நீதிமன்றம் சாதகமாகத்  தீர்ப்பளிக்காவிட்டால், ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டைவிட்டு குடிபெயரப்போவதாக மிரட்டுவது
நிதிமன்றத்தை நிர்பந்திக்கும்  செயல் இல்லை என்பதையும் இன்று தெரிந்து கொண்டேன்!
பின் 2.30 மணியளவில் தீர்ப்பு வந்தது! விஸ்வரூபத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!
பதரிப்போனேன்! ஐயையோ! ஒரு பெரியாரின் உண்மைத்தொண்டனை, மதச்சார்பின்மையின் கலங்கரை விளக்கை நம் மண் இழக்கப்போகிறதே? நம் தமிழ்ப் பண்பாட்டிற்கு என்ன நேருமோ என்று பதட்டமுற்றேன்!
இந்த மனக்காயத்திற்கு  மதியம் 3.30 மணிக்கு மருந்து கிடைத்தது. அதுவும் கமல் ஹாசனே கொடுத்தார். எப்படி ?
"என் முஸ்லீம் சகோதரர்களுக்காக நான் எதுவும் செய்யத் தயார். அவர்கள் விலக்கச் சொன்ன சில காட்சிகளை, குறிப்பாக புனிதக் குர்-ஆன் வாசகங்கள் வரும் பகுதிகளை நீக்க  சம்மதித்துவிட்டேன்”.
அப்பாடா! விஸ்வரூபப் பிரச்னை ஓய்ந்தது! கமல் ஹாசன் தமிழகத்திலிருந்து வெளியேற மாட்டார்! தமிழ் பண்பாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு விட்டது!
அதன் பின் மனம் ஆறுதல் அடைந்தது. மதச்சார்பின்மையும், நீதிக்குத் தலை வணங்குவது எப்படி என்ற அடிப்படை குடியியலும் எனக்கு விளங்கிவிட்டது!
கருத்துச் சுதந்திரம் இல்லாத நாட்டில் எனக்கு இடமில்லை! தமிழ் நாட்டிற்கு நான் வேண்டாதவன்! நான் நடு நிலையாளன்! எனக்கு அநீதி நடந்துவிட்டது! என்று 11.30க்கு கொக்கரித்த கமல் ஹாசன் 2.30க்கு சகோதர பாசத்துடன் நீதியை எப்படி நிலை நாட்டினார்?
இவர் நிலைநாட்டிய நீதி என்ன?

இந்த விஸ்வரூப சர்ச்சை தொடங்கி பல நாட்களானாலும், இதன் கிளைமாக்ஸ் 29-1-2013தான். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து, தொலைக்காட்சி முன் மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். தொலைக்காட்சி நிறுவனங்களும் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி TRP ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன. இந்த விவாதங்களில் பங்கெடுக்க, திரைப்படத்திற்கு தடை கோரிய 23 முஸ்லீம் அமைப்புக்களில் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ’திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்’ என்று ஆணித்தரமான தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த ‘சகோதர’ வாதங்கள் என்ன? 
இந்த வாதங்கள் எப்படி சகோதரத்துவத்தை வளர்த்து கமல் ஹாஸன் மனதில் மதச்சார்பின்மையையும், கருத்துச் சுதந்திரத்தையும் மலர வைத்து, தமிழகத்தை உயிர் வாழ ஏதுவான கிரகமாக மாற்றியது?
சன் நியூஸ் மற்றும்  புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் திரைப்படத்தை தடை செய்ய முஸ்லீம்கள் முன்வைத்த நியாயங்களைப்
பார்ப்போம்.

நமாஸும் பயங்கரவாதமும்

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முன் தொழுகை நடத்தி நமாஸ் ஓதுவது போன்ற காட்சி, முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிரது (சன் டி.வி விவாதத்தில் முஸ்லீம்கள் கருத்து) கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அப்படித்தானே நடக்கிறது. அல்-ஜெசீரா தொலைக்காட்சியில், பயங்கரவாதிகளின் பேட்டிகளும், படுகொலைகளும் அப்படித்தானே முஸ்லீம்களால் காட்டப்  பட்டன! முஸ்லீம் தொலைக்காட்சிகளும், முஸ்லீம்களால் வெளியிடப்படும் யூ- டியூப் தீவிரவாதப் பிரச்சார படங்கள் குர்-ஆனை மையமாகக் கொண்டு தானே வலைத்தலங்களில் இடப்படுகிறது! இது இஸ்லாமுக்கு விரோதமானது! இஸ்லாமியர் மனதை புண்படுத்துகிறது என்றால் இந்த வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? இவர்களுக்கு எதிராக ஏன் ’பட்வா’ பிறப்பிக்கவில்லை?

சென்னையில் மார்ச்சு  2008 ல், முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு நடத்தியது. 6-ஆம் தேதி வியாழனன்று கமல் ஹாஸன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆர்காடு நவாப் வந்து சென்றபின், இன்று விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த தமிழ்நாடு தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லலித் கலா அக்காடமிக்குள் வந்து அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அமைந்த வரலாற்று கண்காட்சியை நாளை மதிய நமாஸுக்குள் மாற்றாவிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டிச் சென்றனர். காவல்துறை கண்காட்சியை அகற்றி ‘கருத்துச் சுதந்திரத்தை’ பேணி காத்தது.
இதில் கவனிக்க  வேண்டிய வாசகம் 'மதிய நமாஸ்’. நம் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளில் கலவரங்கள் இந்த நமாஸ் நேரத்தை ஒட்டியே நிகழ்கின்றன. இது கலவரங்களின் ’டிரெண்ட்’. இந்தக் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் ஜிகாத் என்ற மத நம்பிக்கையை முன் வைக்கிறார்கள். இது தவறு என்று முஸ்லீம் அமைப்புக்கள் கருதினால், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை ’ஹராபி’ என்று சொல்லி அவர்களை கண்டித்தார்களா?
எல்லா முஸ்லீம்களும்  பயங்கரவாதிகளில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான பயங்கரவாதிகள் முஸ்லீம்களாக உள்ளனரே? அதுவும் மதநம்பிக்கையின் அடிப்படையில் ’தாருல் இஸ்லாம்’ என்ற கோஷத்துடன் இயங்குகிறார்களே!

ஆப்கானில் தமிழ்த் தீவிரவாதி

சன் டிவி விவாதத்தில்  பங்கு பெற்ற முஸ்லீம் அமைப்பைச்  சார்ந்தவர், ஆப்கானிஸ்தானில் தமிழ் பேசுவது போல் சித்தரித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. எப்படி ஆப்கானில் தமிழ் பேசும் தீவிரவாதி இருப்பார் என்று லாஜிக்கான கேள்வி கேட்டார்.
முடியுமா?

பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இவைகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டது என்பதை பலமுறை நிபுணர்கள் நிறுவியுள்ளனர். சம்பந்தமில்லாத பாகிஸ்தானிலிருந்து  நம் நாட்டில் வந்து உள்ளூர் உதவியில்லாமல் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடமுடியுமா? தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்கூட பலமுறை பாகிஸ்தானில் தயாரான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியென்றால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் நம் உள்ளூர்வாசிகளுக்கும் தொடர்பில்லையா?

1998 சென்னையில் நடந்த மிலாடிநபி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது "கார்கிலில் புலிக்குன்றை ராணுவம் மீட்டு விட்டது என்ற செய்தி எனக்கு வந்துள்ளது. இதனை வெற்றி முழக்கமிட்டு கொண்டாடுவோம்’ என்று சொன்னவுடன் அந்தக் கூட்டத்தில் பெரும் அமைதி நிலவியது. இதை தினமலர் பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டிருந்தது. நம் நாட்டின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இந்தத் தமிழகத்தில் உள்ள ஒரு சில முஸ்லீம் அமைப்புக்களுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் ஒரு முஸ்லீம் வியாபாரி கார்கிலில் மடிந்த பாகிஸ்தான் வீரர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது பத்திரிக்கைகளில்  வந்தது. இப்படி நெருக்கமான தமிழ் தொடர்புள்ள தீவிரவாதிகள் தமிழ் பேச மட்டுமா செய்வான்? கோனார் தமிழ் உரையே எழுதுவானே?

முஸ்லீம்  விழிப்புணர்வு
பல ஆண்டுகளாக  உணர்வின்றி அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த முஸ்லீம்கள் உலக அளவில் இப்போதுதான் விழித்துக் கொண்டனர். அதனால் தான் இப்போது நாங்கள் எதிர்க்கிறோம் என்ற கருத்தை முஸ்லீம்கள் தரப்பு சன் டிவியில் முன்வைத்தது.
உலக அளவில் எப்படியோ நமக்குத் தெரியாது. ஆனால் காஷ்மீரில் நபிகள் நாயகம் முடி தொலைந்து விட்டது என்று நாடு முழுவதும் கலவரம் நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அடாவடித் தனத்தில் இறங்கி அரசை சட்டத் திருத்தம் செய்யவைத்து, மதச்சார்பற்ற நாட்டிலே தனி மதச் சட்டத்தையும் அனுபவித்துக் கொண்டு நாங்கள் அடக்கப்பட்டிருந்தோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பது சூப்பர் நாடகம். கமல் ஹாஸனையே மிஞ்சிவிட்டார்களப்பா!
இதில் கவனிக்க வேண்டியது  "உலக அளவில்” என்ற வார்த்தை. இதன் மூலம் இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம். இந்த நாட்டின் எல்லைக் கோடுகளுக்கும், தாய்மொழிக்கும், பண்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை இந்த முஸ்லீம்கள் முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவினைவாதக் கோட்பாடு தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்காதா?

அடாவடித்தனம்  செய்வோம் - பகிரங்க அறிவிப்பு
ஆர் கே செல்வமணி என்ற சினிமா இயக்குனர் ஆந்திராவிலும்  கேரளாவிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விஸ்வரூபம் ஓடுகிறதே, பின் நீங்கள் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டவுடன், முஸ்லீம் தரப்பினர் ’பாருங்கள் அங்கேயும் பிரச்சனை வரும்” என்று முழக்கம் இட்டனர். அதற்கு இயக்குனர் செல்வமணி, ’நீங்கள் அந்த மாநிலத்திலும் பிரச்சனையை தூண்டப் போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
கேள்வி இப்படியிருக்க, தமிழக அரசின் தடைக்குப் பின்தான் ஆந்திர முஸ்லீம்கள் திரைப்படத்திற்கு தடைவிதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இப்படித் திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் விஸ்வரூபத்தை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெற இந்த இயக்கங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு  வேலை செய்கின்றன.

வன்முறையால் சாதிப்போம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முஸ்லீம்களின் மீது கமல் ஹாசனைப் போல விஸ்வரூப சகோதர பாசம் கொண்ட திராவிடக்குஞ்சு ஞானி, முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். முஸ்லிம்களைப் பிரநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் சிலர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பது தான் அச்சம்,  என்று பரிதாபப்பட்டார். ஆனால் மனிதநேய மக்கள் கட்சி(தமுமுக)  தலைவர் அப்துல் சமத், "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான் அரசிடம் போய் தடை செய்ய அணுகினோம். அண்ணன் தம்பிகளாகப் பழகும் மக்களுக்கு ஆபத்து வரக்கூடாது. ஆபத்தை வருமுன் தடுக்கவே தடை செய்ய வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறோம்" என்று வன்முறையை காட்டி அரசை மிரட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

30-ம் தேதி ஜனவரி 2013 அன்று விஸ்வரூபம் திரையிடப்பட இருந்த சில அரங்குகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 1947 ல் பாகிஸ்தானை பாரதத்திலிருந்து பிரிக்க முஸ்லீம்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தினர்.  வாள்முனையில் ஹிந்துஸ்தானைப் பெறுவோம்  (லட்கே லேங்கே ஹிந்துஸ்தான்) என்று ஆகஸ்டு 16, 1946 அன்று நேரடி நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லீம்கள் கட்டவிழ்த்த வன்முறையே பீதியை கிளப்பி பிரிவினைக்கு முக்கிய காரணமானது. இப்படி கலவரத்தின் மூலம் காரியத்தை சாதிக்கும் முஸ்லீம்களின் வாடிக்கையான தந்திரம் மறுபடியும் தலை தூக்குகிறது.



’பம்பாய்’ திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் வீட்டில் குண்டெறிந்து கொலை முயற்சி செய்து திரைப்படத் துறையில் கருத்துச் சுதந்திரத்திற்கு  முற்றுப் புள்ளி வைக்க முயன்றதும் இஸ்லாமிய வன்முறையாளர்களே!. இந்தச் சூழலை மறுபடியும் அரங்கேற்ற இந்த 95 கோடி விஸ்வரூபம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கிறது.

நம்பிக்கையின்மையா ? லவ் ஜிகாதா?
சன் டிவியில் முஸ்லீம் தரப்பில் வாதம் செய்த ஒருவர் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முஸ்லீம்கள் என்றால் பெண் கொடுக்க தயங்குகிறார்கள் என்று மனம் வெம்பிப் புலம்பினார். இது உண்மையென்றால் தமிழகத்தின் ஏனைய பகுதி முஸ்லீம்கள் இந்த சில முஸ்லீம்களை அடையாளம் கண்டுகொண்டனர் என்று எடுத்துக் கொள்ளலாமா?.
இப்படி முஸ்லீம் சமுதாயமே ’தீவிரவாதிகள்’ என்று ஒரு சில தமிழ் முஸ்லீம்களை அடையாளப்படுத்தும் போது, ஆப்கானிஸ்தான் தீவிரவாத முஸ்லீம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டானா? அப்படியென்றால், விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சியில் என்ன தவறு?
விவாதத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைப்பைச் சார்ந்தவர் முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்று
ஆதங்கப்பட்டால், கேரளத்தில் நிகழ்த்துவது போல் தமிழகத்தில் ’லவ் ஜிகாத்’ நடத்தி பயங்கரவாதத்திற்கு வலுசேர்க்கும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதே என்று வருந்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

பாகிஸ்தான்  பாசம்
சன் டிவியில் திரையுலகின் சார்பில் வாதிட்டவர், ’அண்மையில் பாகிஸ்தானிலிருந்து பாரதத்திற்குள் நுழைந்து இரண்டு ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்த போது ஏன் இந்த 23 அமைப்புக்களின் கூட்டணி கண்டனம் தெரிவிக்கவில்லை?’ என்று கேட்டார்.
அதற்கு மழுப்பலான பதிலைச் சொன்ன முஸ்லீம் பிரதிநிதி, தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கெதிராக நாங்கள் குரல் கொடுத்தோம் என்றார். ஹிந்துக்களின் ஜாதிப் பிரச்சனையில் ஏன் இவர்கள் மூக்கை நுழைக்க வேண்டும்? ஹிந்துக்களை பிளவுபடுத்தி குட்டையை கலக்கி மீன் பிடிக்கும் தந்திரமல்லவா இது? இஸ்லாம் என்று வரும்போது ராணுவ வீரரைக் கூட ஹிந்துவாகப் பார்க்கும் தேசத்துரோக மனப்பான்மையுள்ளவர்களுக்கு  ஏன் இந்த ஓநாய் பாசம்?

கருத்துச் சுதந்திரம் இல்லாத தமிழகத்தை விட்டு ஓடிவிடுவேன் என்று காலை 11. 30 க்கு பேட்டியளித்த கமல் ஹாசனுக்கு, மாலை 3.30 க்கு சகோதரபாசம் விஸ்வரூபமாகப் பீறிட்டு எழுந்து ‘உங்களுக்காக நான் எதுவும் செய்வேன்’ என்று முழக்கமிடச் செய்தது, இந்த முஸ்லீம்களின் முற்போக்கு மதச்சார்பற்ற கருத்தாழம்மிக்க  சுதந்திரக் கருத்துக்களோ?

மன்மதன் அம்பு  என்ற திரைப்படத்தில் ஆண்டாளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட காமப் பாடலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஹிந்துக்களின்
கோரிக்கையை ஏற்று  நீக்கியவுடன் நான் தயாரிப்பாளராக இருந்திருந்தால் நீக்கியிருக்க மாட்டேன் என்று சொன்ன கமல் ஹாசன், விஸ்வரூப
சகோதரப் பாசத்தினாலோ என்னவோ, நியாயமற்ற முஸ்லீம்களின் அடாவடிக்கு தன் சொந்தப் படத்தின் பல காட்சிகளை நீக்கப்போகிறார்!

இதே திரைப்படத்தில் பிராமண பாஷை பேசிக்கொண்டு ‘பாப்பாத்திம்மா, சிக்கன்ல உப்பு காரம் சரியா இருக்கான்னு பாத்து சொல்லு’ என்று  சைவ உணவு உட்கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கிண்டலடிக்கும்போது அவர்கள் மனது புண்படாதா? அப்படியென்றால் பிராமணர்கள் கமல் ஹாசனுக்கு எதிரிகளா?

இதே கமல் ஹாஸன் படத்தில் காமரசம் சொட்டச் சொட்ட கேவலமாக வர்ணிக்கப்பட்ட ஆண்டாளை வணங்கும் பெரும்பான்மையான ஹிந்துக்கள் மட்டும் கமல் ஹாஸனின் சோற்றில் மண் அள்ளிப் போட்டவர்களா? இவர்களின் மனதைப் புண்படுத்துவதை உரிமை என்று அடிப்படைவாதம் பேசும் கமல் ஹாசனுக்கு பிரிவினைவாத இஸ்லாமியர்களிடம் மட்டும் தான் சகோதர பாசம் விஸ்வரூபம் எடுக்குமோ?

செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா?





* வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்னைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்.

# ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பாலான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர்.

# இந்த நாட்டைக் கூறு போட வேண்டுமென்றால் என்னைக் கூறு போடுங்கள் என்று சொன்ன காந்திஜியும், பாகிஸ்தான் என்பது கற்பனைப் பிதற்றல் என்று சொன்ன ஜவஹர்லால் நேருவும், அவர்களால் வளர்க்கப்பட்ட மத நல்லிணக்கப் பேயின் முன் கூனிக்குறுகி நின்ற அவலம் வரலாற்றில் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

# இஸ்லாம் மத நம்பிக்கை என்ற பெயரில் நடந்த சட்ட மீறல்களும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், இஸ்லாமியரின் தவற்றைச் சுட்டிக் காட்டிய தேசிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டனர். “ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” என்ற முழக்கத்தின் வெளிப்பாடு 1947 ஆகஸ்டு 14-ல் பூரண சுதந்திரம் என்று முழங்கிய தலைவர்கள் கண்முன் பாரத நாடு வெட்டப்பட்டு பாகிஸ்தான் உதயமானது.  இந்தப், பிரிவினையின் விளைவாக பாரத நாடு நான்கு பெரும் போர்களை சந்தித்து, பொருளாதாரத்திலும் பின்னடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் வலுவிழந்து உள்ளது.

# விடுதலைக்குப் பின்னும் வரலாற்றில் நாம் செய்த தவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் இந்த நாட்டின் சட்டத்தையே நிராகரித்த போது, 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு துரோகம் இழைத்தது. அந்த நாள்தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்ட நாள்.
இறைவன் அருளாலும் பல ரிஷி முனிவர்களின் கிருபையாலும் அயோதியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற முனைப்பு ஹிந்துக்களுக்கு இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஹிந்துக்கள் பாரத நாட்டிற்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். பெரும்பான்மையை அனுசரித்துப் போக வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கும் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் நியாயமற்ற அடிப்படைவாத எண்ணங்களை வளரவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலே அமர வேண்டுமென்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றின. இதன் விளைவாக தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீதும் பண்பாட்டின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களைத் தீவிரவாதிகள் என்று கட்டம் கட்டி ஒதுக்கும் இழிசெயலில் அரசியல் கட்சிகளும் மேற்கத்திய அடிவருடிகளான அறிவுஜீவிகளும் இறங்கினர்.
ஹிந்து ஒற்றுமையை சீர்குலைத்ததுடன் நாட்டின் இதிகாச புருஷர்களையும் மஹான்களையும் கொச்சைப் படுத்தி, இந்த தேசத்து மாண்பின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலில் இறங்கினர். பல திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், ஏன் இன்னும் சொல்லப்போனால் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களிலும் கூட இந்த இழிசெயலை சிரமேற்கொண்டு செய்தனர்.

# இன்று சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை தங்கள் வாழ்க்கை லட்சியம் என்றே பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் மார்தட்டி பறை சாற்றியவர்கள். அடிப்படை ஆதாரமின்றி கொச்சைப் படுத்துவதை நியாயமா என்று கேட்டால், கருத்துச் சுதந்திரம் என்று கொக்கரித்தவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அடாவடித்தனம் செய்யும்போது, கமலஹாசனுக்கு மத நல்லிணக்கவாதி என்று சான்றிதழ் வழங்கிய கருணாநிதி, முஸ்லிம்களுடன் கமலஹாசன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்குப் புது விளக்கம் தந்துள்ளார்.

# ஹிந்து என்றால் திருடன், ராமன் எந்த பொறியியற் கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்றெல்லாம் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசியபோது ஹிந்துக்களின் மனம் புண்படுவதை எண்ணிப் பார்த்தாரா? அந்த எண்ணத்தில் என்றாவது ஒரு நாளாவது ஹிந்துக்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தாரா?

# ஹிந்துக்களை அவமானப்படுத்தும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலே ஹார்மனி இந்தியா என்ற அமைப்பின் மூலம் விஷமாகக் கக்கிய கமலஹாசனுக்கு ஆதரவாக இன்று ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காட்டு நவாப் வீதிக்கு வந்தாரா?
இந்தத் தருணத்தில் ஆற்காடு நவாப் அவர்களின் மதநல்லிணக்கச் செயல் ஒன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மார்ச் 6, 2008 அன்று, முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு சென்னையில் நடத்தியது. பாரதத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திக் கொலை, கொள்ளை, கோவில்கள் அழிப்பு, போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட முகலாய அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. இதே கமலஹாசன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காடு நவாப் துண்டுதலினால் வரலாற்று ஆவணங்கள் கொண்ட அந்தக் கண்காட்சி காவல்துறையின் உதவியுடன் மூடப்பட்டது. ஒரு வரலாற்றுக் கண்காட்சியைக் கூட தமிழகத்தில் நடத்த முடியாமல் செய்வோம் என்று சாதித்துக் காட்டிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இதே காவல்துறையும் கமலஹாசனும் துணை போனார்கள். இன்று அதே அடிப்படைவாதம் விஸ்வரூபம் எடுத்து கமலஹாசன் படத்தை விழுங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் அன்று போல் இன்றும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

# இதில் கொடுமை என்னவென்றால் ”புதிய தலைமுறை” தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கமலஹாசன், “இல்லாத ஒரு விநாயகர் சதுர்த்தி.. அதைப் பெரிதாக கொண்டாடி ஒரு பூதாகரமான ஃபெஸ்டிவல் (திருவிழா) ஆக IPL/CCL போல இருக்கிறது. அந்த விழாக்களைப் பார்க்கும்போது ஒரு பதட்டம் ஏற்படுகிறது” என்று முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த ஔவை தந்த விநாயகர் அகவல் கண்ட ஹிந்துக் கடவுளைக் கொச்சை படுத்தியுள்ளார்.

# இஸ்லாம் என்ற தங்கள் மதத்தின் பெயரில் அண்ணன் தம்பி உறவை அறுத்துவிட்டு தாய்நாட்டையே வெட்டிப்பிளந்த முஸ்லிம்களுக்கு கமலஹாசன் எம்மாத்திரம்? தேவையில்லாமல் விநாயகரை தூஷித்ததால் விக்னம்தான் அதிகமானதே தவிர விஸ்வரூபம் வெளிவரவில்லை.

# முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள திமுக அரசு எந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுத்ததோ, அதே அளவிற்கு அதிமுக அரசும் தற்போது சுதந்திரம் கொடுத்து வருகின்றது.
மத்திய திரைப்படத் தணிக்கை குழு அனுமதி வழங்கிய திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது என்ன நியாயம்? அது எந்த விதத்தில் நீதியாகும்? ஏன் இவர்கள் நீதியை விற்கிறார்கள்? கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்? அதுவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில்?

# உண்மை என்னவென்றால் தமிழகம் இன்று ஒரு அமைதிப் பூங்காவாக இல்லை. நாற்பது ஆண்டுகள் முன்பு காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி இன்று தமிழ்நாடு மாறிவிட்டது. சட்டமும் அரசும் காவல்துறையும் அப்பாவி ஹிந்துக்களைத்தான் கட்டுப்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இவைகள் கைகட்டி சேவகம் செய்யும் அடிமைகளே. தமிழகத்தில் அடுக்கடுக்காக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட சட்ட மீறல்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு மறைமுக உதவியும் செய்ததனால், இன்று ’விஸ்வரூபம்’ தமிழகத்தில் ஓடாது என்ற சுவரொட்டி விஸ்வரூபம் திரையரங்குகளில் ஓடத் தகுதி பெற்றது என்ற மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைவிட வலிமை பெற்றதாகிவிட்டது.

# அமெரிக்காவில் முகம்மது நபியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று, அந்தத் திரைப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் அமெரிக்க துதரகத்தின் முன்னால் 15 செப்டம்பர் 2012 அன்று போரட்டத்தில் இறங்கினர் முஸ்லிம் இயக்கங்கள். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; தமிழக அரசும் அனுமதித்தது. தூதரகத்தை மூடவும் செய்தார்கள். முற்றுகை இட்ட எந்த முஸ்லிம் அமைப்பையோ, தாக்குதல் நடத்திய முஸ்லிம் அமைபுகளின் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு.

# அந்தப் போராட்டம் அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்ணா சாலை முழுவதற்கும் பரவியது. எந்தத் தொடர்பும் இல்லாமல் லட்சக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுமாறு, பல மணி நேரம் சென்னையின் உயிர்நாடியான அண்ணா சாலையை ஸ்தம்பிக்கச் செய்தனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீஸார் தாக்கப்பட்டனர். அண்ணா சாலையிலேயே நமாஸ் நடத்தப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்தது. சென்னை காவல்துறை ஆணையர் பலிகடாவாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் எந்த அடாவடி முஸ்லிமும் கைது செய்யப்படவில்லை.

# சென்னையில் 19 டிசம்பர் 2012 அன்று தமிழகத்தின் தவப் புதல்வர்களில் ஒருவரான வடலூர் ரமலிங்க வள்ளலார் அவர்களைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் (தமிழ்நாடு தௌஹித் ஜமாத்) துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதை எதிர்த்து புகார் செய்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சேபகரமான கருத்துக்களை அள்ளிவீசிய முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலர் ஆனந்தன் சென்ற 2012-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி வெட்டப்பட்டார். எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவிலை.

# இப்படிப் படிப்படியாக இந்த அரசின் மெத்தனப்போக்கையும் செயலின்மையையும் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் தங்கள் நிலைபாட்டை ஒருபடி மேலாக மாற்றியுள்ளனர்.

# முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று 1920-ல் கோரிக்கை வைத்து பிரிவினை அரசியலைத் தொடங்கியவர்கள், 1940-ல் தனி நாடு கோரிக்கை வைக்கும் அளவிற்குத் தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்றைய நம் தலைவர்களின் பலவீனப் போக்கும் தவறான அரசியல் கொள்கையும்தான் அதற்குக் காரணம்.

# அவுரங்கசீப் கண்காட்சியை முஸ்லிம்கள் எதிர்த்து மூடியவுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இன்று விஸ்வரூபம் வீணாகப் போயிருக்குமா? வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்க வந்த அவுரங்கசீபை வரலாற்றின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் உலகம் தழுவிய இஸ்லாமின் ரத்த உறவாகப் பார்த்து இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் என்பதை முஸ்லிம்கள் நிலைநாட்டியபோது கண்டுகொள்ளாமல் விட்டது, இன்று விஸ்வரூபமாகப் பிரிவினை வாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் உரிமத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து விட்டது.

# விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படும் ஆஃப்கான் தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு முஸ்லிம் மதத்தினர் தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நம் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பாவிப் பொதுமக்களும் யார்? நம் நாட்டில் இருந்து கொண்டே நம் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நாசகார செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லும் அளவிற்குத் துணிச்சலை இந்த முஸ்லிம்களுக்கு கொடுத்தது யார்? இப்படிப் பேட்டி அளித்தவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்தப் பேட்டியைக் கேட்டுவிட்டுத் திரைப்படத்தைத் தடை செய்தது என்றால், இங்கு நடப்பது தமிழன் அட்சியா அல்லது தாலிபான் ஆட்சியா?  

## கடைசிச் செய்தி: 
தமிழக அரசின் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கமலஹாசன் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் 28 ஜனவரி திங்களன்று, ”தீர்ப்பு நாளை (29 செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும். அதற்குள் இன்று கமலஹாசன் அவர்கள் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சமரசத்திற்கு வருவது நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய தணிக்கைக் குழுவினரால் அனுமதி அளிகப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திங்கட் கிழமை தீர்ப்பளிப்பதாகச் சொன்ன நீதிமன்றம் ஒரு நாள் கழித்து தீர்ப்பு அளிப்பதாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், கமலஹாசனும் அரசாங்கமும் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சொல்வது முஸ்லிம் தீவிரவாதத்திற்கு நீதிமன்றமும் பயப்படுகின்றதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சனி, 5 ஜனவரி, 2013

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு 
விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க  பத்திரிகையான 'தி ஹிண்டு', பல அற்புதமான இதழியல் பணிகளுக்கு முன்னுதாரணமானது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அநதப் பத்திரிகையின் தடம்புரளல் அதன்  வாசகர்களை   மிகவும் வருந்தச் செய்திருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாகவும் சீனாவின் அடிவருடியாகவும் தேசிய நலனுக்கு  எதிராக எழுதுவதே தி ஹிண்டுவின் பாதையாக மாறி இருக்கிறது. இதற்கு அதன் முன்னாள் ஆசிரியர் என்.ராம் முக்கியமான காரணம். அண்மையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்  குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு, அதன்பிறகு, தி ஹிண்டு மாறும் என்ற  எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன் பாதை தொடர்ந்து தடம்  புரண்டு வருகிறது.
இதற்கு மிக  முக்கியமான உதாரணம் தான், அண்மையில் சஞ்சய் ஸ்ரீவத்சவா என்ற  பேராசிரியர் எழுதியகட்டுரை. 'Taking the aggression out of masculinity'  என்ற அந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிகழும் கற்பழிப்பு,பாலியல் வன்முறை போன்ற சமூக களங்கங்களுக்கு நாட்டில் நிலவும் ஆண்மைய ஆதிக்க  உணர்வும்,  ஆண்  என்றால் ஆண்மையின் வடிவம் என்ற கருத்துருவாக்கமும் தான் காரணம் என்று கூறி இருக்கிறார். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவரது எழுத்தின் பின்புலம் நமக்கு தெரியாமல் போயிருக்கும்.
ஜனவரி 3 ம் தேதி வெளியான 'Taking the aggression out of masculinity' என்ற அந்தக் கட்டுரையில், ஆடவரை பெண்கள் வணங்கும் பண்பாடு இந்தியாவில் ஊறிப் போயிருப்பதற்கு 'கார்வ் பண்டிகை'யை முன்வைத்த சஞ்சய்,ஆண்மையின் (masculinity) இலக்கணமாக ஆண்கள் முன்னிறுத்தப்படுவதே  பெண்களை வல்லுறவுக்குஉட்படுத்துவதற்கு காரணம் என்ற தனது  மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது சுவாமி விவேகானந்தர் என்பது தான் வம்பான  விஷயம்.
சுவாமி விவேகானந்தரின் வீரம் ததும்பும்  தோற்றம் நமது சமுதாயத்தில் உள்ள -ஆண்மைத்தனத்தின்  (அதாவது பெண்களை மதிக்காத தன்மையின் என்று புரிந்து கொள்ளவும்) அடையாளம் என்று சஞ்சய் குறிப்பிட்டிருக்கிறார் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்பதை  தி ஹிண்டு பத்திரிகையிடமும் தான் கற்க வேண்டும்.
அடிமைப்பட்ட தேசத்தில் நாட்டு மக்களுக்கு நாம் யார் என்பதைப் புரியச் செய்த சுவாமி விவேகானந்தரை, நாடு இளைஞர்களின் எழுச்சி நாயகனாகக் கொண்டாடுகிறது. இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல,இளைஞிகளுக்கும் அவர் தான் ஆதர்ஷ புருஷர். ஆனால் தி ஹிண்டு பத்திரிகை அவரது 150 வது பிறந்ததின ஆண்டுவிழா கொண்டாடப்படும் தருணத்தில் வேண்டுமென்றே களங்கப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கருத்து சுதந்திரம் என்பது, என்னவாயினும் எழுதக் கொடுக்கப்பட்ட உரிமையல்ல என்பதை தி ஹிண்டு பத்திரிகைக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி ஹிண்டு பத்திரிகை அவ்வப்போது இவ்வாறு ஹிந்து அடையாளங்களையும் தேசிய அடையாளங்களையும் அவமதித்து குதூகலிப்பது வழக்கமே.  ஆயினும், மகாத்மா காந்தி முதல், நாட்டின் எண்ணற்ற தலைவர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரையும் வம்புக்கு இழுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக தி ஹிண்டுவின்  அன்னியஅடிவருடித்தனம் எல்லை கடந்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு  கிளம்பி  இருக்கிறது. 
தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த கழிசடைப் பத்திரிகையை எதிர்த்துஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஹிந்து இயக்கங்களும் விவேகானந்த பக்தர்களும் இதில் முன்னணி வகித்திருக்கின்றனர்; பல இடங்களில் தி ஹிண்டு பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது. சென்னையில் நாளை( 06.12.2012) காலை, அண்ணா  சாலையில்  உள்ள தி ஹிண்டு தலைமை அலுவலகத்திற்குநேரில் சென்று அதன் ஆசிரியரிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விவேகானந்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
மிக சாதுவான இலக்குகளை தாக்குவதே ஆங்கில இதழியல் அறமாக நமது நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. இந்த கபட வேடதாரிகளின் முன்னோடியான தி ஹிண்டு பத்திரிகை - திருவாளர் கஸ்தூரி ஐயங்கார் உள்ளிட்ட தனது முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையை மறந்து- தேச விரோதமான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது கவலை அளிக்கிறது. ஒரு வாசகன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தி ஹிண்டு பத்திரிகையின் இந்த நயவஞ்சக கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தன்னுனர்வுள்ள, விழிப்பான வாசகனே இதழியலின் அடிப்படை. அந்த வகையில் தி ஹிண்டு பத்திரிகை தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்த இடுகையின் மூலமாக தேசிய சிந்தனைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. நமது வழிகாட்டிகளை இகழ்ந்துவிட்டு நாம் பெறுவது எந்த லாபமும் இல்லை. இது உச்சாணி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வேலை. இந்த முட்டாள்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்! 

'
தி ஹிண்டு' என்ற பெயரில் ஹிந்து விரோதமாகவே செயல்படும் அதன் உரிமையாளர்களுக்கு நல்ல புத்தி வர அந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தான் அருள் புரிய வேண்டும். 
-குழலேந்தி