செவ்வாய், 15 நவம்பர், 2011

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

அப்பாடா... ஒரு வழியாக மதச்சார்பற்ற பாதைக்கு அன்னா ஹசாரே குழுவும் திரும்பிவிட்டது. இதற்காக எவ்வளவு திட்டல்கள். வலிகள். தாக்குதல்களை ஹசாரே குழு வாங்கியிருக்கிறது. எல்லாம் ஊத்தவாயர் திக் திக் விசயசிங் ஆரம்பித்து வைத்ததுதான்.
இப்போது தனக்கு ஆர்.எஸ்.எஸ் தயவு தேவையில்லை என்று அன்னா ஹசாரே குழு கூறிவிட்டது. ஆர்.எஸ்.எஸ் சொல்லி நான் ஏதாவது கேட்கிறேன் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய இழுக்கு. எவ்வளவு பெரிய அவமானம் என்பதை இப்போது அன்னா ஹசாரேவும் புரிந்துகொண்டுவிட்டார்.
அது தனக்கு உதவுவதாகவும், பின்னணியில் தனது தொண்டர் படை ஆதரவு அளிக்கும் என்றும் வலிய வந்து ஆர்.எஸ்.எஸ் சொல்வது தனக்கு மிகுந்த அவமானகரமாக இருப்பதாக ஒருவழியாகச் சொல்லாமல் சொல்லி விட்டார். இதைத்தானே திக்விஜயும் ஆளும் மதச்சார்பற்ற அன்னிய சோனியாவும் எதிர்பார்த்தார்கள். அடடே! இவர்களுக்குத்தான் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. அதுவும் ஊழல் மேல் ஊழலாக செய்து, ஒட்டு மொத்த இந்திய வளத்தையும் இத்தாலிக்கு நகர்த்துவதில்! இப்போது இத்தாலி திவாலாகிக் கொண்டிருக்கிறதாம். இந்தியப் பணம் வேண்டுமால் அங்கே அன்னிய சோனியாவுக்கு வளம் சேர்த்து அவர் குடும்பம் வளமாக வலம் வர வழி செய்யப்பட்டுள்ளது.
ஹசாரேவுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது... இனி தன் இயக்கம் போனியாகவேண்டும் என்றால் காங்கிரஸ் பாணியில் பாதை போட வேண்டும் என்று!
அதுதான்... இப்போது அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் ஒன்றாக நின்று நாங்கள் மதச்சார்பு அற்றவர்கள் என்று காட்டிக் கொள்ளப் போகிறார்கள். மதச் சார்பு இல்லாத, தங்களுக்கு என்று மத அடையாளம் எதுவும் இல்லாத முஸ்லிம்களுடன் கை கோர்த்து உபியில் ஒரு பெரிய பேரணி நடத்தப்போகிறார்களாம். அதுவும் டிசம்பர் மாத முதல் வாரத்தில். அனேகமாக டிசம்பர் 6ல் கூட இருக்கலாம். ஏனென்றால் அதுதான் மதச்சார்பற்ற தன்மையைக் குறிக்கும் நாள். அதற்கு பகிரங்கமாகவே அறிவித்து  விட்டார்கள்... ஆர்.எஸ்.எஸ் பாஜக இவற்றுடன் எங்கள் இயக்கத்தை தொடர்பு படுத்தியதால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று காட்டுவதற்காகவே முஸ்லிம்களுடன் சேர்ந்து பேரணி நடத்தப் போகிறோம் என்று. இதைவிட ஒரு கேவலமான வெளிப்படையான பேச்சு எதுவும் இருக்க முடியாது.
ஆனால்... ஒன்றை காங்கிரஸ்காரர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்ஸை ஆரம்பித்த ஹெட்கேவார் ஒரு காலத்தில் காங்கிரஸ் இளைஞர் இயக்கத்தை வழிநடத்தியவர். அதன் போக்கு பிடிக்காமல் வெளியேறி இந்த இயக்கத்தை தொடங்கினார். ஆனால், எங்கே தங்கள் எதிர்கால அரசியலுக்கு எதிர்ப்பு வலுக்குமோ என்று காங்கிரஸ்காரர்கள் நேருவின் மூலம் தொடங்கிவைத்த சமூக விலக்கப் பிரசாரம் இதுவரை பாமர மக்களிடம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
காந்தி கொலை தொடங்கி பல சேற்றை அந்த இயக்கத்தின் மீது வாரி இறைத்து அதனை சமூக விலக்கம் செய்து வைத்துள்ளது.
இப்போது அதற்குக் கிடைத்திருக்கிறார் அன்னா ஹசாரே. இவரின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கே தனக்கு பேரிடியாக அமைந்துவிடுமோ என்று எண்ணி அன்று நேரு செய்த வேலையை இன்று சோனியா தன் கைத்தடி திக்விஜய் மூலம் நிறைவேற்றுகிறார். ஆனால்.... அன்னா முழித்துக் கொண்டுவிட்டார். ஏனென்றால் அவருக்குதான் பாம்பின்கால் பாம்பறியும் ரகமாச்சே. என்ன இருந்தாலும் அவர் உடம்பிலும் அந்தக்கால காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதல்லவா... தானும் இன்னொரு ஏமாந்த ஹெட்கேவார் போல் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் இப்போது பாதையை காங்கிரஸின் வழியிலேயே திருப்பியிருக்கிறார்...
அதுதான்... அதுதான்... அன்னிய சோனியாவே எச்சரிக்கை ... உங்கள் ராகுலுக்கு நாளை சிக்கல் எழப்போகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக